Posts

சொல்வளர்காடு - சில வரிகள்

Image
வெண்முரசு நூல்வரிசையில் பதினொன்றாவது நூல் சொல்வளர்காடு. அதன் வாசிப்பனுபவம் சிலவரிகளில்.. "ஊழின் வழிகளைப்பற்றி ஒருபோதும் உள்ளி உள்ளிச் சொல்லாடலாகாது என்பதே மூதாதையர் கூற்று. அங்கு நிகழ்ந்தவை வேறுமுறையில் நிகழமுடியாதவை என்று உணரும் அடக்கம் இருந்தால் மட்டுமே. அவை அளித்த துயரத்தைக் கடக்கமுடியும்" சுனகக்காட்டில் தர்மனிடம் சொல்கிறார் காத்யாயனர். பன்னிரு படைக்களத்தில் இருந்து காடேகுகின்றனர் பாண்டவர்கள். உடன் தம்பிகளும் திரௌபதியும் வந்தாலும் மெய்மை தேடுவதோ தருமர்தான். கெளஷீதகம் , சுனகம் , துவைதம், ஐதரேயம் , தைத்ரியம் , பிருஹதாரண்யகம், சாந்தீபனி , மைத்ராயனியம், யக்க்ஷவனம் ஆகிய ஒன்பது காடுகளைக் கடந்து கந்தமாதானத்தில் கனலாடி மீள்கிறார் தருமன். குருநிலைகள் , அவர்களின் மரபு வரிசை அதையொட்டிய புராணக்கதைகள் என விரிந்து முன்நிற்கிறது ஒவ்வொரு காடும். சுனகத்தில் இருக்கும்போது மறுபடியும் அஸ்தினபுரியில் நிகழ்ந்ததும் அதையொட்டிய நிகழ்வுகளும் நாடகத்தருணங்களும் விரித்துரைக்கப்படுகிறது .மீண்டும் திருதராஷ்டிரரின் தந்தைப்பற்றும். அங்கிருந்து சினத்தில் கிளம்புகிறார் விதுரர் .அஸ்தினப...

சிவா கிருஷ்ணமூர்த்தி - Janus

Image
லண்டனில் வாழும் எழுத்தாளர் சிவா கிருஷ்ணமூர்த்தியின் புதிய சிறுகதை 'Janus'. https://solvanam.com/2026/04/12/janus/ https://solvanam.com/2026/04/26/janus-2/ இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வரும் அமர் தனது நண்பர் மோகனின் இல்லத்தில் தங்குகிறார் . அங்கு அவருக்கும் மோகனின் மகன் (கல்லூரி செல்லும் வயதில் ) யதுவுக்கும் இடையே ஏற்படும் உரசல்கள் , உரையாடல்கள் என விரிகிறது கதை. இந்த யுகத்தின் பிரதிபலிப்பாக யது அந்த பக்கமும் இல்லாமல் இந்த பக்கமும் இல்லாமல் ஒரு ஊசலாட்ட தலைமுறையின் வெளிப்பாடாய் அமர். அமரின் ஆங்கில உச்சரிப்பு , உணவு பழக்கவழக்கம் என பலவற்றை நகைப்புக்குள்ளாக்குகிறான் யது. அவர்களின் உரையாடலில் ஒரு இடத்தில் சர்ச்சில் , காந்தி போன்ற நிறவெறியர்களின் சிலைகளுக்கு லண்டனில் தார்பூசினோம் என யது சொல்கிறான் . அதில் அதிர்ச்சி அடைந்த அமர் காந்தியை எப்படி அப்படி சொல்லலாம் என கொந்தளிக்கிறார். யது எதிர்வாதமாக சர்ச்சில் இந்த ஊர் மக்களுக்கு நாயகர்தான் என்கிறான். நீங்கள் தான் சர்ச்சிலை குறை சொல்கிறீர்கள் . காந்தியும் அவ்வாறான ஒருவர்தான் வேறு நோக்கில் பார்த்தால் என சொல...

பத்துலட்சம் காலடிகள் - வாசிப்பனுபவம்

Image
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் பத்துலட்சம் காலடிகள் நூல் குறித்து கடலூர் சீனு அவர்களுடன் உரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அவ்வப்போது நண்பர்கள் சொல்வார்கள் .. அடிக்கடி எழுத்தாளர்கள் சொல்வார்கள்.. நேற்றுதான் இந்த நூலைக் கொடுத்தார்கள் இரவுக்குள் படித்து முடித்துவிட்டேன் என . அதைகேட்கும்போது சற்று வியப்பும் பொறாமையும் ஒருங்கே எழும் உள்ளே. மூன்று நாட்களில் ஒரு முழு தொகுப்பை வாசித்தது எனக்கு இதுவே முதல்முறை. பத்துலட்சம் காலடிகள் பற்றி .. வேட்டு , வேரில் திகழ்வது , ஓநாயின் மூக்கு , கைமுக்கு, பத்துலட்சம் காலடிகள் என ஐந்து கதைகள் . ஒளசேபச்சன் என்கிற ஒய்வு பெற்ற காவல் அதிகாரியுடன் கடற்கரையில் காட்டிற்குள் உணவகத்தில் மதுபானக்கூடத்தில் என நண்பர்கள் உணவும் மதுவும் உடனிருக்க நிகழ்த்தும் உரையாடல் பாணியிலான கதைகள் இவை. மையக்கதைகளை ஒளசேபச்சன் சொல்கிறார் அவரின் பணி அனுபவத்தில் இருந்து .. அவரையும் சேர்த்து கதையாக்கி நம்மிடம் சொல்கிறார் மலையாளமும் தமிழும் சரிபாதி தன்னுள் கொண்ட பாண்டித்தமிழ் எழுத்தாளர் (இவரும் ஒளசேபச்சன் நண்பர்களில் ஒருவர்) முதலில் களம் அமைக்கப்படுகிறது, பேச்...

வெண்முரசு - பன்னிரு படைக்களம் - வாசிப்பனுபவம்

Image
வெண்முரசு நாவல் வரிசையில் பத்தாவது நூல் பன்னிரு படைக்களம். இதற்கு முன்பு வாசித்த ஒன்பது நாவல்கள் வாசித்து முடித்ததும் அடுத்து எழும் கேள்வி எப்போது இந்த நூலின் வாசிப்பின்பனுபவத்தை சில வரிகள் எழுதப்போகிறோம் என்பது. ஆனால் பன்னிரு படைக்களம் வாசித்த அன்று மனதில் எழுந்தது எவ்வளவு சொல்லினும் அதற்குள் அடங்கா வெறுமை ஒன்று . ஏன் , எதற்கு , அனைத்திற்கும் பொருள்தான் என்ன என்கிற கேள்விகள் அடுத்த சில நாட்களுக்கு வேறெதையும் வாசிக்கவும் விடவில்லை. சூதாட்டக்களம் நோக்கி அனைவரையும் கொண்டு சென்று நிறுத்தி பாண்டவர்களை மதியிழந்து மண்ணிழக்கச்செய்து கானேக வழிசொல்லும் கதைகள் நிரம்பிய கதைகளின் தொகுப்பு இந்த நூல். சித்திரை முதல் பங்குனி வரையிலான பன்னிரண்டு மாதங்களைப் பிரிவுகளாய் கொண்டு விரிந்திருக்கிறது பன்னிரு படைக்களம் . மகதநாட்டரசன் ஜராஸந்தனின் கதை விரிவாக சொல்லப்படும் வைகாசி மாதத்திற்கு முன்பு சித்திரையில் களம் அமைக்கிறது ரம்பகரம்பர்களின், ரக்தபீஜனின் கதைகள். மகத மன்னன் பிருஹத்ரதனின் மூத்த மகன் எனவும் கொள்ளலாம் ஜரையின் மைந்தனெனவும் கொள்ளலாம். இரு கதைகளும் இணைந்து ஜராவனத்தில் இருந்து நாடு கோ...

2025 இல் நான் வாசித்த நூல்கள் , பக்கங்கள்

Image
நாவல்கள் & சிறுகதைகள் : குமரித்துறைவி - ஜெயமோகன் - 175 பக்கங்கள் வெண்முரசு - வெண்முகில் நகரம் - 1071 பக்கங்கள் வெண்முரசு - இந்திர நீலம் - 958 பக்கங்கள் வெண்முரசு -காண்டீபம் - 786 பக்கங்கள் வெண்முரசு - வெய்யோன் - 853 பக்கங்கள் ஒளிர் நிழல் - சுரேஷ் பிரதீப் - 128 பக்கங்கள் பத்துப்பாத்திரங்கள் - சுரேஷ் பிரதீப் - 82 பக்கங்கள் வாடிவாசல் - கிராபிக்ஸ் நாவல் - 112 பக்கங்கள் தங்கப்புத்தகம் - ஜெயமோகன் - 288 பக்கங்கள் ஆனையில்லா - ஜெயமோகன் - 320 பக்கங்கள் மலர்த்துளி - ஜெயமோகன் - 200 பக்கங்கள் நீலத்தாவணி - ரம்யா - 126 பக்கங்கள் காவியம் - ஜெயமோகன் - சுமார் 500 பக்கங்கள் நீல நிழல் - ஜெயமோகன் - சுமார் 100 பக்கங்கள் மைத்ரி - அஜிதன் - 239 பக்கங்கள் வெள்ளிநிலம் - ஜெயமோகன் - 242 பக்கங்கள் கவிதை: அந்தியில் திகழ்வது - வே.நி.சூர்யா - 72 பக்கங்கள் கரப்பானியம் - வே. நி . சூர்யா - 103 பக்கங்கள் உன்னை யாரும் அனைத்துக்கொள்ளவில்லையா - 1775 பக்கங்கள் காந்தியைக்கொன்றது தவறுதான் - ரமேஷ் பிரேதன் - 140 பக்கங்கள் கட்டுரை: துடிக்கின்ற நெஞ்சென்று ஒன்று - 104 பக்கங்கள் குரு - எச்.எஸ்.சிவப...

ரா.கிரிதரனின் சாதகப்பறவையின் காத்திருப்பு

Image
தஞ்சை பெரியகோவிலுக்கு கண்ணந்தங்குடியில் இருந்து சென்று அமர வயது 28 ஆக வேண்டியிருந்தது எனக்கு.அப்படி பல நிகழ்வுகளை எல்லோராலும் தனது வாழ்நிகழ்வுகளில் இருந்து பட்டியலிடமுடியும்தான். கடந்த ஓரிரு ஆண்டுகளாக லண்டன் இலக்கிய வட்ட நண்பர்களுடன் கதை விவாதங்கள் (அவ்வப்போதேனும்), நேர் சந்திப்புகள்(பெரும்பாலும்) என தொடர்ந்து உரையாடி வருகிறேன். லண்டன் இலக்கியவட்டம் சுமார் பத்து ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. வாரம் ஒருமுறை வாட்ஸாப் உரையாடலில் இலக்கியம் வளர்க்க முயற்சி செய்வதும் அதன் செயல்திட்டத்தில் ஒன்று எனக் கொள்ளலாம். இந்த நண்பர்கள் குழாமின் முன்னணி முகங்களில் ஒருவர் எழுத்தாளர் ரா.கிரிதரன். அவரை முதலில் பார்த்த போது அவரின் வசீகரிக்கும் சிரிப்பும் , உரையாடல்களின்போது அவர் வைக்கும் வாதங்களும் அவர் சொல்லாமல் சொல்லின அவரின் வாசிப்பின் ஆழத்தை.ஆனால் அவர் எழுத்தாளர் என்பது சற்று பிந்திதான் தெரியவந்தது. நூல்களும் வெளிவந்துள்ளன என்கிற செய்தி முதலில் ஒரு ஆச்சர்யத்தை அளித்து பின்பு சற்று அடங்கிவிட்டது என்னுள். ஆனால் மாறாச் செயலாய் அவர் நூல்களை மட்டும் சேகரித்து வைத்திருந்தேன். திடீரென மேலே சொன்னேனே ...

வெண்முரசு - வெய்யோன் - வாசிப்பனுபவம்

Image
'ஏன் சிவதரே, என்னை விழையும் எவரும் இங்கில்லையா ?' கர்ணன் சொல்லும் இந்த வரியைக் கொண்டே மொத்த நாவலையும் பார்த்தால் புரியும் , அது சொல்வது யாராலும் மறுக்கமுடியாமை ஒன்றை. இந்த ஆண்டு வாசித்த வெண்முரசின் கடைசி நாவல் வெய்யோன். கர்ணனின் கதைகளை, அலைக்கழிப்புகளை , கைவிடப்படும் நிகழ்வுகளை என பலவற்றை சொல்லிச் செல்கிறது வெண்முரசு வரிசையில் ஒன்பதாவதாக அமைந்த இந்நூல். செந்தழல் வளையத்தில் இருந்து தொடங்குகிறது சம்பாபுரி அரண்மனையில் சூதர்மொழியில் தன்கதையை தானே கேட்டு அமர்ந்திருக்கிறான் கர்ணன். பரசுராமரால் கைவிடப்படும் கதை. தாழொலிக்கதவுகளில் அங்கநாட்டின் சம்பாபுரி அரண்மனையில் அவைமுறைமைகள், சம்பிரதாய சடங்குகள் எவ்வண்ணம் உருவாகி வந்தது. அதோடு அங்கிருந்த அரசுக்கு மாற்றாய் ஒரு சூதன் மகன் அரசமைக்க அதை மக்களும் அவையும் ஏற்றுக்கொள்ள வைக்க அமைச்சர்களின் பங்களிப்பு என்ன என்ன என தொடங்குகிறது இந்த பகுதி. வெய்யோன் மகன் , அளித்துதீராதவன் என அடைமொழிகளுக்கு நிகராய் வசைச்சொற்களும் வந்து விழுகிறது கர்ணனின் மேல் . அரசு சூழ்தல் , ஆட்சி அதிகாரம் என இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டவனாய் வேறொரு உலகத்தில் வா...