Posts

Showing posts from April, 2025

சென்றடையவில்லை என்னும் நிறைவின்மை !

Image
இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்புதான் என்னை சிறிதளவேனும் வாசிக்க வைக்கிறது , முன்நகர்த்துகிறது என்று சொல்ல முடிகிறது . ஆனால் அதன் பக்க விளைவுகளில் ஒன்று . வாசிக்கும் வேகத்தைவிட வாங்கும் வேகம் அதிகமாகி வீட்டில் நிறைந்துவரும் நூல்கள் . ஒரு நேரம் சிறிய குற்றவுணர்வும் பெரும்பாலும் நிறைவுமே கொள்கிறேன் அந்த செயலால். திடீர் என எழுந்து சென்று அடுக்கில் இருந்து எடுத்து ஒரே நாளில் சமீபத்தில் வாசித்த நூல் ' சில ஆசிரியர்கள் சில நூல்கள்' . அசோகமித்திரனின் கட்டுரைத் தொகுப்புகள் அடங்கிய இந்த நூல் . தமிழ் எழுத்தாளர்களில் தொடங்கி உலக எழுத்தாளர்கள் பலரை மற்றும் தமிழ் நூல்கள் சிலவற்றை அறிமுகம் செய்கிறது. இந்த புத்தகத்தில் குறிப்பிடத்தகுந்த அம்சங்கள் என நான் உணர்வது சில உண்டு . ஒன்று அசோகமித்திரனின் நூல்களில் நான் வசிக்கும் முதல் அபுனைவு நூல் இது . சரி அவரின் புனைவு நூல்கள் நிறைய படித்துவிட்டாயா என்றால் அதுவுமில்லை . மணல் என்ற குறுநாவல் மட்டும் Tamil Literary Talks ல் அறிந்து வாசித்துள்ளேன் முன்பு. இரண்டு , நாம் ஆத்மார்த்தமாக உணர்ந்து செய்யும் விழையும் எதுவும் நம்மை நாடி வரும் ...

தூயது

Image
குழலினிது யாழினிது தொடங்கி இன்று வரை குழந்தைகளை சிலாகிக்காத போற்றாத இலக்கியங்கள் இல்லை . அனைத்தையும் படித்துவிட்டுதான் அந்த குழந்தைகளை வன்புணர்வுக்கு நிகராக பெற்றோர் என்ற பெயரில் அவர்தம் வளர்ச்சியில் அக்கறை என்ற பெயரில் அவர்களை நசுக்கவும் செய்கிறோம் . எழுத்தாளரும் கதைசொல்லியுமான திரு பவா செல்லத்துரை ஒருமுறை சொன்னார். "உலகத்திலேயே அதிகக் கொடுமைக்கு உள்ளாவது பெண்கள் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன ஆனால் நான் சொல்கிறேன் . பெண்கள் அல்ல குழந்தைகள் . அதுவும் பெற்றோரால் சுற்றத்தால் சமூகத்தால் " என்று . நானும் அதை பெரும்பாலும் ஒத்துக்கொள்கிறேன். மல்லாக்கப் படுத்து என்னையே நான் மாரில் துப்பிக்கொள்ளும் வகையான சீறல்களை எனது குழந்தைகளிடம் காண்பிக்கும் தருணங்கள் தவிர்த்து மற்ற நேரத்தில் . சரி இப்போது நான் சமீபத்தில் என் குழந்தைகளிடம் கண்ட தூய தருணங்கள் சில . முதலாவது : இரவு தூங்கப்போகும் நேரம் . கணவன் மனைவி என்ற சொற்களை எங்களிடமோ அல்லது வேறெங்கோ கேட்டுவிட்டு அதன் பொருளறிய விழைந்தான் நான்கு வயதாகும் நிமலன் ரெங்கநாதன். நாங்களும் திருமணம், கல்யாணம், குடும்பம் என விளக்கம...

அ.மார்க்ஸ் அவர்களின் நேர்காணல் வாசித்து அதன் அனுபவத்தை எழுத்தாளர் சாம்ராஜ் அவர்களுக்கு எழுதிய கடிதம்

Image
அண்ணன் வணக்கம். பேராசிரியர் உயர்திரு அ. மார்க்ஸ் அவர்களின் நேர்காணலை வாசித்தேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. 41 பக்கங்களில் ஆனால் அதில் தொட்டுச்சென்ற விஷயங்களை தொடர்வதென்றால் வாழ்நாள் வேண்டுமெனும் அளவிற்கு பறந்து விரிந்த வெளியின் முன் நிற்கவைத்துவிட்டீர்கள் என்னை. உங்கள் மூலமாக மற்றும் ஆசிரியர் மூலமாக பேராசிரியரின் பெயர் அறிந்தவன், அவர் வாழ்ந்த பாப்பா நாட்டிற்கு அருகில் பிறந்தவன். எங்கிருந்தோம் இவ்வளவுநாள் என்ற குற்ற உணர்வும் இப்போதாவது அறிந்தோமே என்ற நிறைவையும் ஒருங்கே அடைந்தேன். இந்த உரையாடலில் நான் அறிந்துகொண்டது மற்றும் வியந்தது பல. மாற்றுக் கருத்துடன் விவாதிக்க நினைப்பது வெகுசிலவே (ஆனால் அதையும் முழுத்திறனுடன் வெளிப்படுத்த நான் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது என்று உணர்கிறேன். ஆகவே அந்த வெகு சிலவும் அறிதலே). ஊழின் விளைவா அல்லது என் அகத்தின் விழைவா எனத் தெரியவில்லை . நான் கற்றுவரும் அல்லது அறிய வரும் ஆசிரியர்கள் அனைவர்க்கும் அடிநாதமாக ஒன்றுண்டு . அது நில்லாக்காலங்கள் பலகண்டது , 'உண்மை' எனும் பெயர் கொண்டது . 'உண்மையை நிறுவ உண்மை ஒன்றுதான் வழி...

மூன்று அறிதல் முறைகள்

Image
ஆசிரியர் ஜெயமோகனின் மூன்று அறிதல் முறைகள் ' என்னும் உரையை தனியாக அமர்ந்து முழுக்கக் கேட்டேன். மூன்று அறிதல் முறைகள் என கற்பனை - Imagination , தர்க்கம் - Logic , உள்ளுணர்வு - Intuition ஆகியவற்றை குறிப்பிடுகிறார். இந்தியாவிற்கு வெளியே அவர் ஆற்றிய முதல் தத்துவ உரையான இதில் மிகத் தெளிவாக நம்மை அளித்து உள்வாங்கக்கூடிய வகையில் பேசினார். கற்பனைக்கு உதாரணமாக கலையும் , தர்க்கத்துக்கு புறவயப்பார்வை (objectivity), பொதுமைப்படுத்துதல் ( generalization) , நிலையானத்தன்மை( certainty ) அதே நேரத்தில் தன்னையே ரத்து செய்து முன்செல்லும் நோக்கு , வடிவம் ( structure ) ஆகியவற்றைக் கொண்ட அறிவியலையும், உள்ளுணர்விற்கு நமது அறிவு, பண்பாட்டு அறிவு , மொழி அறிவு , மானுட அறிவு என அதன் வழிகளை ஊற்றுக்கண் நோக்கி செலுத்தினார். 'மூளை என்பது ஒரு பொருள் அல்ல , அது ஒரு நிகழ்வு என்றவர் கூறியது எனக்கு ஒரு திறப்பை அளித்தது. ஏனெனில் இதே மூளை மாற்றமடையாமல் இருந்தால் நாம் எப்போதும் ஒரே மனநிலையில் ..குறிப்பாக ஒரே மனநிலையில் அல்லவா நீடிப்போம். அதற்கு உதாரணமாக Phineas Gage என்னும் அமெரிக்கக் கட்டிடத் தொழி...