Posts

Showing posts from May, 2025

உயிர்த்தெழ ஒரு பயணம் - மூன்றாம் , நான்காம் நாட்கள் மற்றும் வீடு திரும்பல்

Image
ஒரு குழுவாக பயணம் செய்வதில் அதுவும் அந்த பயணத்தை நோக்கிய ஒத்தக்கருத்துடைய நண்பர்களுடன் செல்வது எப்போதும் மகிழ்ச்சியே. ஆனால் அதிலுள்ள பெரிய இடரே நேர மேலாண்மை. நேர மேலாண்மையை வெள்ளைக்காரர்களிடம் காண்பிப்பதில் நிறுவுவதில் நம்மவர்கள் வல்லுநர்கள். ஆனால் நம் மக்களிடம் சலுகைகள் எடுத்துக்கொள்வோம் . நான் உண்பது மற்றவர்களின் நேரத்தை என்ற புரிதல் அறவே அற்று . இந்த பயணத்தில் ஒரு அட்டவணையை மிகத்தெளிவாக தயாரித்து முன்னரே அளித்தது மட்டுமல்லாமல் . அதை செயல்படுத்தியத்திலும் முன்நின்றவர்கள் நண்பர் சந்துருவும் அவரது மனைவி ப்ரியாவும் . ஊரில் மாட்டிற்கு குத்துவதற்கு (அப்படி குத்தினால் அது வேகமாக அதன் வேலையை செய்யும் .. வண்டியிழுக்கும் , ஓடும் , உழும்) தார்குச்சியை பயன்படுத்துவோம் . அது மூங்கில் குச்சிதான் அதன் முனையில் ஆணி அடித்து அதை பென்சில் முனை போன்று கூர்தீட்டப்பட்டிருக்கும். மாட்டின்மேல் அன்புள்ளவர்கள் அதை மெதுவாக மாட்டின் உடம்பின்மேல் வைக்கமட்டுமே செய்வர். அதுபோல இந்த பயணத்தில் எங்களை விரட்டி யாரும் யாருடைய நேரத்தையும் வீணாக்காமல் திட்டத்தின்படி செல்லவைத்தார்கள் அவர்கள். ஞாயிறு ...

உயிர்த்தெழ ஒரு பயணம் - இரண்டாம் நாள்

Image
காலையில் எழுந்ததும் கடலைப்பார்த்து கண்விழிப்பதெல்லாம் எனது அன்றாடத்தில் ஒருவகை ஆடம்பரம் என்று தோன்றினாலும் . அதுவொரு அரிய நிகழ்வே. அப்படி புனிதவெள்ளிக்கு மறுநாள் நாங்கள் டாம்மி ஜாக்ஸ் அடுக்ககத்தில் இனிய ஓய்வுக்குப்பிறகு கண்விழித்தோம் . முதல்நாள் மழைத்தூறலினூடாகவே இருட்டில் ஆண்கள் மட்டும் கடற்கரை சென்று வந்ததால் காலை பெண்மணிகள் செல்லவேண்டும் என்பது எழுதப்படாத ஒரு புரிந்துணர்வு. எங்கள் பயண அமைப்பாளர் சந்திரமௌலி வழிகாட்டுதலில் வண்டி ஓட்டுதலில் சௌமியா , ரைஹானா , ப்ரியா இவர்களுடன் தாயுடன்தான் இருப்பேன் என்று நிமலன் அடம்பிடித்ததால் அவன் . இவர்கள் காலையில் வெண்மையும் நீலமுமாய் மேலே வானம் விரிந்திருக்க அதை தன்னகத்தே வாங்கி நம்மகத்தே அளிக்கும் கடலை நோக்கி சென்றனர் . யாகவியைத் தவிர மற்ற குழந்தைகள் எல்லாம் நீள்துயிலில். யாகவி மட்டும் நாங்கள் வீட்டில் தினமும் ஒப்புநோக்க சற்று சீக்கிரம் காலைப்பணிகளை தொடங்கிவிடுவதால் அவளும் அவ்வாறே எழுந்து பழகியுள்ளாள். அதிகம் பேசவும் , கேள்வி கேட்கவும் . அவளின் இந்த செயல்பாடுகளால் சௌமியாவும் நானும் அவ்வப்போது இன்பச்சிக்கல்களில் மாட்டிக்கொள்வதுண்டு. நண்பர்களிட...

உயிர்த்தெழ ஒரு பயணம் - நாள் ஒன்று

Image
தமிழ்த் திரைப்படம் ஒன்றில் கதாநாயகன் திருமணச் சடங்குகளை பகடி செய்யும்விதமாக சடங்குகள் அதன்விளைவான புகைமண்டலம் இதெல்லாம் வேண்டாம் அதனால் தனக்கு நேரடியாக அடுத்த கட்டத்துக்கு செல்வதே விருப்பம் என்று சொல்வார். இது ஒருவகையில் பயண ஏற்பாடுகளில் எனக்கு மிகவும் பொருந்தும் . என்னதான் பயணம் செல்வது நன்று, அது நம்மை அன்றாடத்தில் இருந்து வேறொரு தளத்திற்கு இட்டு செல்லும் , புத்துணர்ச்சி கிடைக்கும், இயற்கை அனுபவம் கிட்டும் என்றாலும் இன்னும் நானாக முன்வந்து அல்லது நானே முன்னின்று ஒரு சுற்றுலாவை முன்னெடுத்தது இல்லை. கிராமத்திலேயே அதிகம் புழங்கியவன் அந்த கிராமத்தை ஒட்டிய அவனுக்கு நகரம் என்று புலப்படும் சிற்றூருக்கு முதன்முதலில் செல்லும்போது சாக்கடையை பார்த்து முகம் சுழித்து மூக்கை பொத்துவான், என்னைப் பற்றி இதை நான் எழுதும்போது எனக்கு என்னிடமே அவ்வாறான ஒரு உணர்வே . சரி சுயபுராணம் போதும். 1. இந்த ஆண்டு யேசுநாதர் உயிர்த்தெழுந்த திங்கட்கிழமையை ஒட்டி வந்த வார இறுதியில் இங்கு இங்கிலாந்தில் கார்ன்வால் என்னும் ஊருக்கு(செல்டிக் கடலுக்கு அருகில் உள்ளது) செல்வதாக நண்பர் சந்திரமௌலி அவர்களின் முயற்சியில...