Posts

Showing posts from March, 2024

கொடைமடம் - வாசிப்பனுபவம் - அண்ணன் சாம்ராஜிடம் பகிர்ந்தது

அன்புள்ள அண்ணனுக்கு, வணக்கம். தங்களின் 'கொடைமடம்' வாசித்தேன் . இப்போது பெருமையுடன் சொல்ல முடியும் எழுத்தாளர் சாம்ராஜின், வெளியான அனைத்து படைப்புகளையும் வாசித்த வாசகர்களில் நானும் ஒருவன் என. தங்களை நான் சந்தித்துள்ளேன். நேரில் உரையாடும் நல்லூழைப் பெற்றேன் என்பதால் அல்ல. தங்களின் எழுத்து என்னை அந்த கதைக்களத்துடன் வாழ செய்கிறது. அதில் சில நான் வாழ்ந்த அல்லது வாழத் தவற விட்ட அல்லது மிகத் துல்லியமாக சொன்னால் இனியாவது அகத்தாய்வு செய்து அப்படி வாழ விரும்புகிற தருணங்களை அடிக்கோடிட்டு காட்டுகிறது என்பதாலேயே ! அரிட்டாபட்டி சமணப் படுகையில் தொடங்கி அங்கேயே திரும்ப வந்து முடியும்(அச்சில் வந்த கதையை மட்டும் சொல்கிறேன் :) ) இந்தப் பெருங்கதையில்.. முகுந்தனின் துணை கொண்டு காண்பித்தது .. மாற்றில்லா அரசியல் எனும் தீவிரவாதத்தின் கோர முகத்தை , மதுரையின் அழகை , காதலின் வன்முறையை , மனிதக் கீழ்மையை இவை எல்லாவற்றையும் விட வாசித்து முடித்ததும் என்னில் மேலெழுந்து நிற்பது இதில் காட்டப்பட்டுள்ள மனித மேன்மை தருணங்களே ! இடதுசாரி அமைப்பின் தீவிர உறுப்பினர்களை நண்பர்களாய் கொண்டு ஆனால் தன்னை அத...

சிறுகதை- வாய்ப்பாடு - கே.எம்.ஆர்.விக்னேஸ்

  நிலைக்கண்ணாடியின் முன்நின்று பார்க்கையில் மனம் ஏனோ பின்னோக்கிப் போனது. அன்றுதான் நான் ஒரு வார விடுப்பில் தாயகம் சென்று திரும்பி இருந்தேன். அந்த நிகழ்வை பல நூறு தடவை நினைத்துப்பார்த்தாயிற்று. ஆனாலும் இன்னும் இனிமை குறையவில்லை அதனிலிருந்து. ஊருக்கு செல்லும்முன்பே குறுகிய நாட்களில் அங்கு செய்ய வேண்டியவைகள் என்னென்ன என குறித்து வைத்திருந்தேன்.அதில்  நட்சத்திர முத்திரையிட்டு முக்கியமென வைத்திருந்தது , நான் படித்த கல்லூரிக்கு அருகிலுள்ள டீ கடை. கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாகிறது அந்த பகுதிக்கு சென்று. அதைப் பார்த்து எனது மனைவி நகைப்புடன் கேட்டாள் 'எல்லாரும் கல்லூரிக்கு போய் பாக்கணும்னு சொல்வாங்க. நீங்க  என்ன அங்க இருக்குற டீ கடைக்கு போகணும்னு சொல்றீங்க ' . 'அது எனக்கு முக்கியமான, உணர்வுப்பூர்வமான  இடம் ' என்று ஏதேதோ சொன்னேன். அவளுக்கு புரிந்ததாக தெரியவில்லை என எனக்கு நிச்சயமாக தெரியும்.ஆனால் இவன் வேற மாதிரி என்று திருமணமான இந்த எட்டு ஆண்டுகளில் அவளும் நன்கு என்னை புரிந்துவைத்திருந்தாள். சென்னை சென்று சொந்த ஊருக்கு செல்லவேண்டும். ஆகையால் சென்னை சென்ற அன்றே மாலையில் க...

வெண்முரசு - முதற்கனல் - வாசிப்பனுபவம்

 வெண்முரசு ஒரு கடல் அதில் இறங்கினால் வேறு எந்த வாசிப்பையும் நிகழ்த்த முடியாது என்பது நான் எனக்கே போட்டுக்கொண்ட வேலி. ஆனால்  நண்பர் திரு.கதிரவனின் கடிதத்தை ஆசானின் தளத்தில் பார்த்ததும் ஏதோ ஒரு வேகத்தில் நானும் பதிவு செய்து உள்வந்தேன். வேகமும் ஆர்வமும் ஒரு புறம் இருந்தது என்றாலும் . முக்கிய காரணியாக என்னை உள்ளிழுத்தது ஐந்தாண்டிற்கான அதன் பாடத்திட்டம். ஆனால் அது பாடதிட்டமல்ல ஒரு தியானத்திட்டம் என்பது முதற்கனலில் சில அத்தியாயங்கள் கடந்ததுமே கண்டு கொண்டேன். அதே போல மற்ற வாசிப்பு மட்டுமல்ல நாட்களும்  இன்னும் செம்மையடைகிறது வெண்முரசுடன்.  முதலில் பகலில் வாசிக்க தொடங்கிய நான். பின்பு அதிகாலையில் மறுக்க முடியா ஒரு மனப்பயிற்சிபோல , தியானம் போல வாசிக்க தொடங்கினேன். முதலில் சற்று கடினமாக இருந்ததுபோல ஒரு காட்சிப்பிழை என்னுள் தோன்றினாலும் ..நாட்கள் செல்ல செல்லத்தான் உணர்ந்தேன் அதன் நாயகர்களாய் வாழ்ந்து அல்லது வாழ முயற்சித்து வருகிறேன் என. அதோடு முதல் வாசிப்பாய் வெண்முரசு ஒரு அத்தியாயம் என தொடங்கும் என் நாட்கள் முன்னிலும் நேர்த்தியாய் நகர்கிறது என்றால் அது சற்றும் மிகையல்ல. முதற்கன...